Disqus Shortname

சாத்தணஞ்சேரி கிராமத்தில் ஸ்ரீவிட்டலராஜப் பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் 05/02/2020
உத்திரமேரூர் அடுத்த சாத்தணஞ்சேரி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீவிட்டலராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் கடந்த சில ஆண்டுகளாக சிதலமடைந்து  காணப்பட்டது. கிராம மக்கள் மற்றும்
இளைஞர்கள் ஒன்று கூடி கோவில் புணரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில
மாதங்களாக நடந்து வந்த புணரமைக்கும் பணியானது முடிவடைந்த நிலையில்
நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களும் புண்யாவாசனம்,
வாஸ்துஹோமம், சாந்தி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள்  நடந்தன. அதைத் தொடர்ந்து   மூன்றாம்கால யாக வேள்வி பூஜை  முடிந்தபின் மேளதாளங்கள் முழுங்க வானவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு  வரப்பட்டு கலசங்கள் மீது ஊற்றி தீபாராதனை காண்பித்து பக்தர்கள் மீது புனித நீர்
தெளிக்க கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடைப்பெற்றது. நிகழ்ச்சியையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்கள்  அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய  அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்
மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இரவு கோவில் வளாகத்தில்  பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் ஸ்ரீவிட்டலராஜப் பெருமாள் வீதியுலா வந்து  பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தீபாராதனை காட்டி சுவாமியை  வழிபட்டனர். விழாவையொட்டி சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

No comments