Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை உடைப்பில் கைதான குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

உத்திரமேரூர்30/01/2020
உத்திரமேரூர் அடுத்த கலியப்பேட்டை கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை கடந்த 24 ஆம் தேதியன்று அதிகாலையில்  மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சாலவாக்கம்
போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் சேதமடைந்த பெரியாரின் சிலையை சீரமைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் பெரியார் சிலை உடைத்ததாக கலியப்பேட்டை கிராமத்தை சேர்ந்த தாமோதரன் 36 என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் அடிப்படையில் தாமோதரன் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்ப்பட்டார்.

No comments