உத்திரமேரூர் ஸ்ரீ.சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்
உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற கோவிலான ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீ.சுந்தரவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் தெப்போற்சவ விழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி ஸ்ரீ தேவி பூ தேவிகளுடன்
ஸ்ரீ.சுந்தரவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்குஅருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து கோவில் குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவிபூதேவிகளுடனான உற்சவர் ஸ்ரீ.சுந்தரவரதராஜப் பெருமாள் எழுந்தருளி குளத்தினைவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இச்தெப்போற்சவ நிகழ்ச்சிக்கு உத்திரமேரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
No comments