உத்திரமேரூர் அருகே அரசு பள்ளிக்கு ரூ.4.70 லட்சம் மதிப்பில் டேபிள் சேர் வழங்கும் விழா
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் டேபிள் சேர்கள் மற்றும் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், நிர்வாகிகள் சோழனூர் ஏழுமலை, கோபாலகிருஷ்ணன், சசிகுமார், வடிவேலு, தயாளன், தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர். எம்.எல்.ஏ, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டுநிதியிலிருந்து ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் சிறார்களுக்கான 69 டேபிள் சேர்களை பள்ளி சிறார்கள் பயன்பாட்டிற்காக வழங்கி வாழ்த்தி பேசினர். பின்னர் 11 ஆம் வகுப்பு பயிலும் 198 மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து மானாம்பதி அரசு பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு கடந்த கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு பயிலும் 148 மாணவ- மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments