Disqus Shortname

உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் மேம்பாலம் சாலை ரூ.81 லட்சத்தில் சீரமைக்கும் பணி

உத்திரமேரூர் 27/01/2020
உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் மேம்பாலம் சாலை மற்றும் ரவுண்டானாவானது கனரக வாகனங்களால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியது. இந்த சாலையை சீரமைக்க கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்  கோரிக்கையின் பேரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து இதில் ரூ.45 லட்சம்  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.36 லட்சம் மொத்தம் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் திருமுக்கூடல் பாலம் சாலை மற்றும் ரவுண்டானா சீரமைக்கும் பணியானது நேற்று துவங்கியது. நிகழ்ச்சிகள் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் ஆகியோர்  கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜையை பேட்டு துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட
அலுவலர் கோவிந்தராஜன் நிர்வாகி நடராஜன், ஊராட்சி செயலர்கள் உதயகுமார், எஸ்.ஆர்.வெங்கடேசன், ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments