Disqus Shortname

உத்திரமேரூர் அருகே சிதலமடைந்து காணப்படும் சூரியஒளி மின் தகடு

உத்திரமேரூர் 20/02/2020
உத்திரமேரூர் அடுத்த திருவாணைக்கோவில் கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் முக்கிய சாலைகளில் கடந்த ஆண்டு சூரிய ஒளி சக்தி சாதணங்கள் மற்றும் அதன் உதவியோடு எரியக்கூடிய சாலையோர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த தெரு விளக்குகள் மற்றும் சூரிய ஒளி மின் தகடுகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் புதியதாக அமைக்கப்பட்ட சூரிய ஒளி சக்தி சாதணங்கள் மற்றும் சாலையோர மின் விளக்குகள் சிதலமடைந்து எரியாமல் உள்ளது. இதனால் திருவாணைக்கோவில் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக தெருவிளக்குகள் எரியாததால் தெருக்கள் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதன்காரணமாக
இரவு நேரங்களில் விஷப்பூச்சுகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்துடனே வசிக்க வேண்டியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் திருடர்கள் பயத்தினாலும் கிராம மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் இந்த சூரிய ஒளி மின் சக்தி சாதணங்கள் மற்றும்
சாலையோர மின் விளக்குகள் சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments