பெருநகர் கிராமத்தில் ஸ்ரீ.பிரம்மபுரீஸ்வரா் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் உற்சவம்
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் அருள்மிகு பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரா் ஆலயத்தில் தைப்பூச பெருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு
நாளும் பல்வேறு வாகனத்தில் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் வீதியுலா வந்து
பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான 63
நாயன்மார்கள் உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. காலை 63 நாயன்மார்கள் அபிஷேக ஆராதனை முடிந்தபின் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுடன் 63 நாயன்மார்களும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் தேரினை தீபாராதனை காட்டி வழிபட்டனர். விழாவையொட்டி கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments