Disqus Shortname

உத்திரமேரூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர் ஜன 25
உத்திரமேரூரில்தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி  நடந்தது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் தலைமை தாங்கி பேரணியை டியசைத்து
துவக்கி வைத்தார். பேரணியில் உத்திரமேரூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது பள்ளி வளாகத்தில் துவங்கி கேத்தாரீஸ்வர்ர் கோவில் தெரு, பஜார் வீதி சன்னதி தெரு, பெரிய நாராசம்பேட்டை தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.இதில் வாக்களிப்பதின் அவசியம், பணத்திற்காக நமது ஓட்டுகளை விற்க
கூடாது வாக்குரிமை நமது நாட்டு உரிமை உள்ளிட்ட விழிப்புணர்வு
வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், துண்டுபிரசுரங்கள் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் மாணவியர்கள் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர் நிகழ்ச்சியில் பள்ளி மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments