பெருநகர் கிராமத்தில் ஸ்ரீ.பிரம்மபுரீஸ்வரா் ஆலய திருத்தேரோட்டம்பெருநகர் கிராமத்தில் ஸ்ரீ.பிரம்மபுரீஸ்வரா் ஆலய திருத்தேரோட்டம்
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள அருள்மிகு பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரா் ஆலயத்தில் தைப்பூச பெருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் வீதியுலா வந்து
பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான
திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. காலை புனித நீராடி, மலர்களால்
அலங்கரிக்கப்பட்ட பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருத்தேர் மீதேரி கிராமத்தில் மாட வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து தீபாராதனை காட்டி தேங்காய் உடைத்தும் சுவாமியை வழிபட்டனர். விழா முழுவதும் தினமும் மாலை வேலைகளில் கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, விழாவையொட்டி கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தோரோட்டத்தினை காண பெருநகர் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
No comments