Disqus Shortname

உத்திரமேரூர் அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் 149 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உத்திரமேரூர் 26/02/2020
உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது முகாமில் உத்திரமேரூர் வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் தலைமை  தாங்கினார். நேர்முக உதவியாளர் ரமேஷ், தனி வட்டாட்சியர் ஞானவேல், மண்டல வட்டாட்சியர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 47 பயனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி மற்றும் விதவை உதவித்தொகை 6 நபர்கள், கல்வி உதவி தொகை 7 நபர்கள், திருமண உதவித்தொகை 4 நபர்கள், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 4 நபர்கள், வேளாண்துறை சார்பில் 5 நபர்களுக்கும்,இலவச வீட்டு மனை பட்டா 46 நபர்கள், சிறு விவசாயி சான்று 4 நபர்கள், வாரிசு சான்று 6 நபர்கள், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்டவைகள் – 10 நபர்கள், பழங்குடியின நல அட்டை – 8 நபர்கள், ஆண் குழந்தை இன்மை சான்று – 02 நபர்கள் என மொத்தம் 149 பயனாளிகளுக்கு ரூபாய் 20 லட்சத்து 31 ஆயிரத்து 025 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்டதுறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை ரீதியான பணிகள் குறித்து விளக்கிக் கூறினர் மேலும் நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர் நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார்,நிர்வாகிகள் வெங்கடேசன், வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ஸ்ரீதர் வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து
கொண்டனர்.

No comments