Disqus Shortname

உத்திரமேரூரில் தேசிய பெண் குழந்தைகள் தின சைக்கிள் பேரணி

உத்திரமேரூர் 30/01/2020
உத்திரமேரூரில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஹேண்ட் இன் ஹேண்ட் சார்பில் சைக்கிள் பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் முதுநிலை ஒன்றிய மேலாளர் பொண்ணுவேல் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் தெபோராள், இன்ஸ்பெக்டர் விநாயகம், ஒருங்கிணைப்பாளர்கள் வேலு, கோகிலா
ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு பல்வேறு  ஆலோசனைகள் கூறி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். சைக்கிள் பேரணியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி சன்னதி தெரு, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக சென்று பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவியர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments