Disqus Shortname

புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவி

உத்திரமேரூர் 25/02/2020 
காஞ்சி மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாளை யொட்டி இன்று உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் ஏழை எளியோருக்கு
நலத்திட்ட உதவிகள் வழங்கி, 8 ஆயிரம் பேருக்கு அறுசுவையுடன் கூடிய சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருஉருவ படத்திற்கு தீபாராதனை காட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அன்னதான நிகழ்ச்சியினை காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு சங்கத் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு சைக்கிள், தையல் இயந்திரம், அயன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சமபந்தி விருந்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர். பின்னர் பொது மக்களோடு பொது மக்களாக சமபந்தியில் அமர்ந்து சாப்பிட்டனர். நிகழ்ச்சியில் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன், துரைபாபு, வேலு, மேனல்லூர் பெருமாள், வேலாயுதம், தமிழ்செல்வன் உட்பட கழக நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments