உத்திரமேரூர் அருகே அம்மாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டம் கிராமத்தி
ல் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தருமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் தண்டரை தணிகைவேல், வேலு, மணி, ராஜாமணி, துரைபாபு, பூந்தண்டலம் ராஜேந்திரன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்புச் செயலாளர் மைதிலிதிருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சிகால சாதனைகளை தொடர்ந்து வழி நடத்திவரும் தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும், விவசாயிகளுக்கான எண்ணற்ற நலத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது ஏழை, எளிய மக்களுக்கு சைக்கிள்கள், தையல் இயந்திரம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments