Disqus Shortname

ஆலப்பாக்கம் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்

உத்திரமேரூர் 14/02/2020
உத்திரமேரூர் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்
நடந்தது. முகாமில் மண்டல தனி வட்டாட்சியர் சுகுணா தலைமை
தாங்கினார். வருவாய் ஆய்வாளர் மாலதி, கூட்டுறவு வங்கி தலைவர்
தண்டரை தணிகைவேல், தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம
நிர்வாக அலுவலர்கள் சார்லஸ் அனைவரையும் வரவேற்றார். முகாமில்
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை,
பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித் தொகை
உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 25 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து
பெறப்பட்டது. அதில் 8 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 17
மனுக்கள் கணினி பதிவேற்றம் செய்யப்பட்டு பரிந்துரைக்கான
அனுப்பப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த
கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். நிகழ்ச்சியில்
அரசு அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments