Disqus Shortname

உத்திரமேரூர் சுற்றி தொடரும் செயின் பறிப்பு சம்பவம் பொது மக்கள் பீதி

உத்திரமேரூர் 27/02/2020
உத்திரமேரூர் பஜார் வீதியில் வசிப்பவர் ஜெயலட்சுமி ஸ்ரீபெரும்பதுார் இந்து
அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் கடந்த, 22ம் தேதியன்று சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மாகரல் அருகே சென்றபோது அவரின் பின்னால்இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஜெயலட்சுமி கழுத்தில் இருந்து 10சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து மாகரல் போலீசார்விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் உத்திரமேரூர் – காஞ்சிபுரம்சாலையில் மருத்துவான்பாடி கூட்ரோடில் அங்கன்வாடி பணியாளர் பங்கஜவள்ளி 57என்பவர் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பங்கஜவள்ளியினை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச்செயினை பறித்துச்சென்றனர். இதேப் போல் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம்அரசு கல்லுாரியில் பணியாற்றிவரும் விரிவுரையாளர் பிரியங்காவிடன்காட்டுப்பாக்கம் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால்இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிக்க முயன்றனர்.இச்சமயத்தில் பேராசிரியர் சுதாரித்துக் கொண்டதால் அவரின் தங்க செயின்தப்பியது. இச்சம்பவங்கள் குறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். இதனால் உத்திரமேரூர் மக்கள் பீதியில் உள்ளனர்.இச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ள கொள்ளையர்கள் உத்திரமேரூரை சுற்றிபல்வேறு இடங்களில் தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றனர். எனவேபோலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இந்த கொள்ளையர்களை பிடிக்கவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments