Disqus Shortname

உத்திரமேரூர் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மாணவியர்களுக்கு அமைச்சர் பென்ஜமின் வழங்கி துவக்கி வைத்தார்

உத்திரமேரூர் பிப், 02

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் காஞ்சி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். ஸ்ரீபெருமந்தூர் எம்.எல்.ஏ பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோஇருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஜெய்சங்கர், சேஷாத்திரி, ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தருமன், தங்கபஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் கலந்து கொண்டு 283 மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டியினை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் இளைஞரணி துரைபாபு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் வேலு, மணி, அ.பி.சத்திரம் பெருமாள், நாஞ்சிபுரம் புருஷோத்தமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments