உத்திரமேரூர் அரசு பள்ளியில் கண் சிகிச்சை முகாம் 55 மாணவியர்களுக்கு கண்ணாடி
உத்திரமேரூர் 06/02/2020
உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் கணொளி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாணவியர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது முகாமில் பள்ளி தலைமையாசிரியர் தெபோராள் தலைமை தாங்கினார். மருத்துவ குழு லாரன்ஸ் பிரபாகரன், கம்மாளம்பூண்டி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஆர்.அண்ணாமலை கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவர் தீபலட்சுமி மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு
பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர்களுக்கு கண் பரிசோதனை செய்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். இதில் பரிசோதனை செய்யப்பட்ட 55 மாணவியர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments