ஒரகாட்டுப்பேட்டை அரசு பள்ளியில் 91 மாணவ – மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா க.சுந்தர் எம்.எல்.ஏ வழங்கினார்.
உத்திரமேரூர் அடுத்த ஒரகாட்டுப்பேட்டை கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தசுந்தரசெல்வி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டி.குமார், ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் துரைவேல், நிர்வாகிகள் பரமசிவம், சீனுவாசன், மோகன், இராசகோபால், ரீட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில்
காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து
கொண்டு பள்ளியில் 11 ஆம் வகுப்பில் பயிலும் 91 மாணவ – மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் வரவிருக்கும் பொதுத் தேர்வில் மாணவ-மாணவியர்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெணில் தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரகன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-
மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments