Disqus Shortname

உத்திரமேரூரில் புரட்சி தலைவி ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

உத்திரமேரூர் 24/02/2020
தமிழகம் முழுவதும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் காஞ்சி மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய அஇஅதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளையொட்டி உத்திரமேரூரில் நடந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் வாலாஜாபாத். பா.கணேசன் தலைமை தாங்கி முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவச்சிலைக்கும், புரட்சி தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டி வணங்கினர். இதையடுத்து உத்திரமேரூர் நடுத்தெரு மாரியம்மன் கோவில் மற்றும் ரெட்டதாலீஸ்வரர் திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன், இளைஞரணி துரைபாபு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் வேலு, மணி, தண்டரை தணிகைவேல், ராஜாமணி, தமிழ்செல்வம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேப் போல் உத்திரமேரூர் சாலவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்கள் தேரும் கழகக் கொடியேற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர்.

No comments