Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கல்லூரி மாணவி கடத்திய வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

உத்திரமேரூர் 18/02/2020
உத்திரமேரூர் அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்
விவசாயி இவரது மகள் சுமதி 17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்
உத்திரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று
வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று கல்லூரிக்கு சென்ற
மாணவி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் மகள் கிடைக்காததால்
அதிர்ச்சியடைந்த பெற்றோர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார்
அளித்தனர். புகாரில் உத்திரமேரூர் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த  ராஜேஷ் கடத்தியதாக பெற்றோர் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கடந்த
ஞாயிற்றுக்கிழமையன்று கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ராஜேஷின் தாய்  ஞானசுந்தரி 47, அக்கா லூர்துமேரி, மாமா விஜய் 27, மற்றும் நண்பர்கள்
சார்லஸ் 25, பிரகாஷ் 31, சதீஷ் 24 ஆகிய 6 பேரை கைது செய்து தீவிர
விசாரணை நடத்தினர் இதில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில்
ராஜேஷ் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷை சுற்றி
வளைத்த போலீசார் அவரை பிடித்து செங்கல்பட்டு மகிலா கோர்டில்
ஆஜர்படுத்தி போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments