Disqus Shortname

உத்திரமேரூரில் குடியுயுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்

உத்திரமேரூர் 30/01/2020
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை  எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் விவசாய சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், தமிழ்நாடு முஸ்லீம்
முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி என பல்வேறு கட்சியினர் போராட்டத்திற்கு ஆதரவு தந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மனித சங்கிலி போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால்
சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments