Disqus Shortname

உத்திரமேரூர் அருகே குடும்ப தகராறு மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

உத்திரமேரூர் 20/02/2020
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தை சேர்ந்தவர் நெசவாளர் ஜீவராஜ் 30 இவரது மனைவி குழலி 24 இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. ஜீவராஜ் தந்தை வஜ்ரவேலு, தாய் மல்லிகா ஆகியவர்களுடன் கூட்டு குடும்பத்தில் வசித்து வருகின்றனர் இந்நிலையில் குடும்பத்தில் அவ்வப்போது கணவன் மனைவி மற்றும் மாமியார் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த குழலி வீட்டின் மாடியில் இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில்  வெகுநேரமாகியும் வீட்டில் குழலி இல்லாததால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டின் மாடிக்கு சென்று பார்த்ததில் குழலி
தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெருநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்து குழலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments