Disqus Shortname

உத்திரமேரூரில் மாற்றுதிறனாளிகள் மனித வளைய கவன ஈர்ப்பு போராட்டம்

உத்திரமேரூர் 06/02/2020
உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மனித வளையப் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலாஜி, ஜான்சன், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மாற்றுதிறனாளிகள் அனைவரும் வளைய வடிவில் அமர்ந்து மாற்றுதிறனாளிகளுக்கு வழங்க வேண்டிய உதவி உபகரணங்களை உடனே  வழங்கிடு, மாதாந்திர உதவித் தொகையினை 3 ஆயிரமாக உயர்த்தி  வழங்கிடு, மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் சிறப்பு அடையாள அட்டை வழங்கிடு, 100 நாள் வேலையில் பாக்கித் தொகையினை உடனே வழங்கிடு,
மாற்றுதிறனாளிகளுக்கு வங்கிகளில் வழங்கப்படும் கடனை நிபந்தனையின்றி வழங்க நடவடிக்கை எடு, தனியார் துறையிலும் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாற்றுதிறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments