திருப்புலிவனம் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்
உத்திரமேரூர் 31/01/2020
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம் நடந்தது. முகாமில் தனி வட்டாட்சியர் ஞானவேல் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளாபாய் அனைவரையும் வரவேற்றார் முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 21 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 7 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள 14 மனுக்கள் கணினி பதிவேற்றம் செய்யப்பட்டு பரிந்துரைக்கான அனுப்பப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது திருப்புலிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து
No comments