மாயமான கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதித்ததால் பரபரப்பு
உத்திரமேரூர் 13/02/2020:
உத்திரமேரூரில்,
மாயமான கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தர
வேண்டும் என்று அவரத் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால்
ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்திரமேரூர் தாலுகா, காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, 17 வயதுடைய சிறுமி, உத்திரமேரூரில் உள்ள தனியார் கலை கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த, 10ம் தேதி காலை, கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர், பின்னர்,
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவருடைய பெற்றோர் பல்வேறு
இடங்களில் தேடினர். ஆனால, கண்டுபிடிக்க முடியவில்லை.உடனே இது குறித்து, சிறுமியின் தந்தைஉத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார்
கொடுத்தனர். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து மாயமான பள்ளி மாணவியை தேடி
வருகின்றனர். இந்த நிலையில் மாயமான மாணவியை விரைவில் கண்டுபிடிக்க வலியுறுத்தி, உத்திரமேரூர் வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலாளர்கள், மக்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தால்
அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
No comments