அம்மா திட்ட முகாம்
உத்தரமேரூர் தாலுக்கா வாடாதவூர் ஊராட்சிக்குட்பட்ட சடச்சிவாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று அம்மா திட்ட முகாம் நடந்தது. வட்டாட்சியர் சி.சாவித்திரி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் எம்,ஐ,சதீஷ் முன்னிலை வகித்தார். தனிவட்டாட்சியர் அன்னம்மாளிடம் பெறப்பட்ட மனுக்கள் மொத்தம் 78 பட்டா மாற்றம் 6 முதியோர் உதவி தொகை 28, வீட்டுமனை பட்டா 32, குடும்ப அட்டை திருத்தம் 9, உழவர் பாதுகாப்பு திட்டம் 3, மின்இணைப்பு வேண்டி பொது மனு 1, பெறப்பட்டது. சாலவாக்கம் மண்டல துணை வட்டாட்சியர் லட்சுமி நன்றி கூறினார்.
No comments