Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் பா.ம.க கட்சி இரு சக்கரவாகன பேரணி

உத்தரமேரூர் நவ, 25
உத்தரமேரூர் மேற்கு ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நிறுவனர் டாக்டர் ச.இராமதாஸ், டாக்டர்.அன்புமணி ஆகியோரின் ஆணைக்கினங்க இரு சக்கர வாகனங்னளில் அண்மையில் பேரணி நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கெங்காதரன் பேரணியை துவக்கி வைத்தார். காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் பரந்துார் சங்கர் தலைமை தாங்கினார். சைக்கிள் ஷாப் கே.முனுசாமி அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய  தலைவர் என்.ஆறுமுகம் கோ.மனோகரன், மே.ஏ.தருமன், அ.வி.லோகநாதன் கோவிந்தசாமி, சர்க்கரை கணேசன், எஸ்.ஆறுமுகம் வி.ஜி.மணி உட்பட நிர்வாகிகள் பேரணியில் கலந்து கொண்டனர் உத்தரமேரூரில் ஆரம்பித்த பேரணி 57 கிராமங்களில் பாட்டாளி மக்கள் கட்சியை மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற துண்டு பிரசுரங்களை கிராமங்களில் உள்ள மக்களிடம் வினியோகம் செய்து பிரசாரம் செய்தனர்.

No comments