Disqus Shortname

மலையாங்குளத்தில் 45 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா

உத்தரமேரூர் நவ,09
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் மலையாங்குளம் கிராமத்தில் சனிக்கிழமையன்று விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடந்தது. ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் 45 பயனாளிகளுக்கு ரூ.6,01,200 மதிப்பில்
விலையில்லா வெள்ளாடுகள் ஆடுகள் வழங்கி பேசியதாவது மலையாங்குளம் கிராமத்திற்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி  வழங்க தமிழக முதல்வர்  உத்தரவிட்டுள்ளார். அதன்படி உங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும், என்றார். இவ்விழாவில் மாவட்டக்குழு உறுப்பினர் சுமதி குணசீலன், ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதாஸ்ரீதர், ஒன்றிய குழு உறுப்பினர் சுபாஷிநந்தகுமார்  ஒன்றிய பொருளாளர் வி.அண்ணாதுரை ஊராட்சி செயலாளர் செல்வராஜ், கிளைசெயலர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments