Disqus Shortname

உத்தரமேரூரில் மக்கள் நீதி மன்றம் கூட்டம்

உத்தரமேரூர் நவ,23
உத்தரமேரூரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கான மக்கள் நீதி மன்ற கூட்டம் அண்மையில் உத்தரமேரூர் நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. உத்தரமேரூர் சட்ட உதவி தலைவரும், மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதி மன்ற நீதிபதியுமான எம்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதிகள் டி,.துரைராஜ், ஜி.தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கூட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடன் கட்டாத 250 வழக்குகள் நிலுவையில் இருந்தது. இதில் 58 வழக்குகள் முடித்து வைத்து ரூ.2 கோடியே 40 லட்சத்து ஆயிரத்திநுாறு நிலுவை தொகையாக அறிவிக்கப்பட்டது. இதில் 15 லட்சத்து 35 ஆயிரத்தி 500 ரூபாய் உடனடித் தொகையாக வசூலிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் உதவியாளர் கே.இராமலிங்கம்  செய்திருந்தார்.

No comments