Disqus Shortname

1567 பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர்,மின்விசிறிகளை எம்.எல்.ஏ.வழங்கினார்.

உத்தரமேரூர் நவ,18
உத்தரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் 1567 பயனாளிகளுக்கு தமிழக அரசு விலையில்லா மிக்சி,கிரைண்டர், மின்விசிறிகள்   வழங்கும் விழா அண்மையில் நடந்தது. நாஞ்சீபுரம் கிராமத்தில் 297 பயனாளிகளுக்கும் மேலும் அரசாணிமங்கலம் 312, பென்னலுார் 311,அனுமந்தண்டலம் 351 ஒழுகரை 296 ஆக மொத்தம் 1567 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் உத்தரமேரூர் மேற்கு, கிழக்கு ஒன்றிய கழகசெயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சி.சரஸ்வதி அனைவரையும் வரவேற்று  பேசினார். நாஞ்சிபுரம் கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர்  அனுசுயாநந்தன் தலைமை தாங்கினார். அரசாணிமங்கலத்தில் சுப்புரெட்டியார் தலைமை தாங்கினார்.ஒழுகரை கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஒ.வி.வரதன் தலைமை தாங்கினார். ஆள்வராம்பூண்டி கிளை கழக செயலாளர் லோகநாத பிள்ளை, தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன். காட்டுப்பாக்கம் ஆர்.சரவணகுமார், ஒன்றிய பாசறை துணைச்செயலாளர் வி.ரமேஷ், ஊராட்சி மன்றதுணைத்தலைர் எம்.நாராயணன் திருவந்தவார்முருகன், தண்டரைதணிகைவேல், காவாம்பயிர் ஊராட்சி மன்றத்தலைவர்  எஸ்.குணசேகரன், புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழனி, பொ.சசிகுமார், மேனலுார் வேலாயுதம், மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன் வாடாதவூர் ஒன்றிய குழு உறுப்பினர் டி.எம்.சடையாண்டி பூந்தண்டலம் இராஜேந்திரன், மானாம்பதி கண்டிகை லுாசியா ஜேம்ஸ், உத்தரமேரூர் பேரூராட்சி துணைதலைவர் இ.தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர். உத்தரமேரூர் மண்டல துணை வட்டாட்சியர் லட்சுமி நன்றி கூறினார்.   


No comments