Disqus Shortname

நோய்கள் குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு போட்டி

உத்திரமேரூர் நவ,19:
தொற்றா நோய்கள் குறித்து, மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டி இன்றும், நாளையும் பள்ளிகளில் நடக்கிறது.
உத்திரமேரூர் வட்டாரத்தில் அரசு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தொற்றா நோய்கள் (சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய்) குறித்து, கட்டுரை மற்றும் ஓவியம், விழிப்புணர்வு அடங்கிய வாசகங்கள் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் இன்று மற்றும் நாளை
(20, 21ம் தேதிகளில்) நடக்கிறது.
ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் கலந்துகொள்ளலாம். இந்த போட்டிகளுக்கென
ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 1,000 ரூபாய் வீதம், 43 பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.
பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஒன்றிய மாவட்ட அளவிலான போட்டிகளும் நடைபெற உள்ளன. உத்திரமேரூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments