உத்தரமேரூர் காவல் துறையினரை கண்டித்து சாலைமறியல்
உத்தரமேரூர் நவ,04
உத்தரமேரூர் அடுத்த மேட்டுகாலணி பகுதியை சேர்ந்தவர் சேட்டு இவரின் மகள் நிர்மலா (எ) நித்யா (25) 2 வருடங்களுக்கு முன்பு வேடபாளையத்தை சேர்ந்த ஓட்டுநர் மதன் (எ) லோகநாதனை திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே ஆரியாத்துார் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி மாலதிக்கும் நிர்மலாவின் கணவர் மதனுக்கும் இடையே காதல் ஏற்ப்பட்டது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாலதியை மதன் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இது சம்மந்தமாக உத்தரமேரூர் காவல் நிலையத்தில் கடந்த 6.10.2013 அன்று முதல் மனைவி நிர்மலா புகார் செய்துள்ளார். ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நிர்மலாவின் தந்தை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உத்தரமேரூர் காவல் துறையினரை கண்டித்து மேட்டுக்காலணி பேரூந்து நிறுத்தம் அருகே உத்தரமேரூரில் இருந்து எல்.எண்டத்துார் மதுராந்தகம் சாலையில் திங்கட்கிழமையன்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உத்தரமேரூர் காவல்
துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை
அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்தரமேரூர் அடுத்த மேட்டுகாலணி பகுதியை சேர்ந்தவர் சேட்டு இவரின் மகள் நிர்மலா (எ) நித்யா (25) 2 வருடங்களுக்கு முன்பு வேடபாளையத்தை சேர்ந்த ஓட்டுநர் மதன் (எ) லோகநாதனை திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே ஆரியாத்துார் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி மாலதிக்கும் நிர்மலாவின் கணவர் மதனுக்கும் இடையே காதல் ஏற்ப்பட்டது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாலதியை மதன் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இது சம்மந்தமாக உத்தரமேரூர் காவல் நிலையத்தில் கடந்த 6.10.2013 அன்று முதல் மனைவி நிர்மலா புகார் செய்துள்ளார். ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நிர்மலாவின் தந்தை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உத்தரமேரூர் காவல் துறையினரை கண்டித்து மேட்டுக்காலணி பேரூந்து நிறுத்தம் அருகே உத்தரமேரூரில் இருந்து எல்.எண்டத்துார் மதுராந்தகம் சாலையில் திங்கட்கிழமையன்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உத்தரமேரூர் காவல்
துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை
அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments