Disqus Shortname

மணல் திருட்டில் பத்து பேர் கைது

உத்திரமேரூர் நவம்பர் 22, :
திருமுக்கூடல் பாலாறு ஆதவப்பாக்கம் செய்யாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட 10 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்துள்ள திருமுக்கூடல் பாலாற்றில் மணல் திருடிய எட்டு பேரை சாலவாக்கம் போலீசார் கைது செய்தனர். அதேபோல் ஆதவப்பாக்கம் செய்யாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்பட்ட மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments