Disqus Shortname

காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல்

உத்திரமேரூர்  நவம்பர் 03,:
 திருக்கழுக்குன்றம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி மன்ற பதவிகளில் இருந்தவர்கள், இயற்கை மரணம், விபத்து, கொலை உட்பட பல காரணங்களால், காலியாகவுள்ள பதவிகளுக்கு புதியவர்களை தேர்வு செய்ய இடைத்தேர்தல், 6 மாதங்களில் நடத்த வேண்டும். பல காரணங்களால், சில இடங்களில் தேர்தல் நடத்துவது காலதாமதம் ஏற்பட்டது.கடந்த, டிச., 31ம் தேதிக்கு முன், காலியான பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்காக பணி, நடந்து வருகிறது. தற்போது, வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். இடைத்தேர்தல் நடைபெற உள்ள இடங்கள் விவரம்:
உத்திரமேரூர்
பேரூராட்சி 13வது வார்டு (பொது)

சிற்றுாராட்சி தலைவர்:
அங்கம்பாக்கம் ஊராட்சி (பொது)
அரியனுார் ஊராட்சி
(ஆதிதிராவிடர் பொது)
மண்ணிவாக்கம் (பொது)
பொன்விளைந்தகளத்துார் (பொது)
மாம்பாக்கம் (பொது - பெண்)
ஒன்றிய குழு உறுப்பினர்கள்:
காட்டாங்கொளத்துார் 16வது வார்டு (பொது)
ஸ்ரீபெரும்புதுார் 10வது வார்டு (ஆதிதிராவிடர் பொது)
நகராட்சி உறுப்பினர்கள்:
மறைமலை நகர் 11வது வார்டு
(ஆதிதிராவிடர் பொது)
செங்கல்பட்டு 1வது வார்டு (பொது)
செங்கல்பட்டு 6வது வார்டு (பொது)
மதுராந்தகம் 15வது வார்டு (பொது)
பல்லாவரம் 2வது வார்டு (பொது)

No comments