அரசு அதிகாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
காஞ்சிபுரம் : November 22:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், அவர்கள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பேசிக் கொண்டிருந்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உத்தரமேரூர் - கண்டிகை பெரும்பேர் மண் சாலையை மேம்படுத்தி தார்ச் சாலை அமைக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். அதற்கு சம்மந்தப்பட்ட துறை சார்பில், நிதி இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன், நிதி இல்லை என்று கூறக் கூடாது, சம்மந்தப்பட்ட பகுதியில் சாலை அமைக்க எவ்வளவு செலவு ஆகும் என்று திட்டம் தயாரிக்கப்பட்டதா என்று கேட்டார்.அப்போது சம்மந்தப்பட்ட துறை சார்பில் கலந்து கொண்ட அலுவலர் பதில் கூற முடியாமல் நின்றார்.விவசாயிகளின் கோரிக்கைக்கு உரிய பதில் அளிக்கத் தெரிந்தவர்கள் மட்டும்தான் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். கடமைக்காக கலந்து கொண்டோம் என்பதற்காக கூட்டத்துக்கு வரக் கூடாது.அடுத்து நடைபெறும் கூட்டங்களில் உரிய பதில் அளிக்க முடியாமல் கலந்து கொள்ளும் அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனால் அதிகாரிகள் அச்சத்தில் உறைந்தனர். விவசாயிகள் நம்பிக்கையுடன் உற்சாகமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், அவர்கள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பேசிக் கொண்டிருந்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உத்தரமேரூர் - கண்டிகை பெரும்பேர் மண் சாலையை மேம்படுத்தி தார்ச் சாலை அமைக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். அதற்கு சம்மந்தப்பட்ட துறை சார்பில், நிதி இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன், நிதி இல்லை என்று கூறக் கூடாது, சம்மந்தப்பட்ட பகுதியில் சாலை அமைக்க எவ்வளவு செலவு ஆகும் என்று திட்டம் தயாரிக்கப்பட்டதா என்று கேட்டார்.அப்போது சம்மந்தப்பட்ட துறை சார்பில் கலந்து கொண்ட அலுவலர் பதில் கூற முடியாமல் நின்றார்.விவசாயிகளின் கோரிக்கைக்கு உரிய பதில் அளிக்கத் தெரிந்தவர்கள் மட்டும்தான் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். கடமைக்காக கலந்து கொண்டோம் என்பதற்காக கூட்டத்துக்கு வரக் கூடாது.அடுத்து நடைபெறும் கூட்டங்களில் உரிய பதில் அளிக்க முடியாமல் கலந்து கொள்ளும் அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனால் அதிகாரிகள் அச்சத்தில் உறைந்தனர். விவசாயிகள் நம்பிக்கையுடன் உற்சாகமடைந்தனர்.
No comments