Disqus Shortname

வாடாதவூரில் நாளை 'அம்மா' திட்ட முகாம்

உத்திரமேரூர் நவ.21 - :
அம்மா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் முகாம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடாதவூர் ஊராட்சியில், நாளை (22ம் தேதி) நடக்கிறது. முகாமில், அப்பகுதி மக்கள் கலந்துக்கொண்டு, குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல், வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் மற்றும் விதவை நிவாரணத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான மனுக்களை அளித்து, உடனடி பயன் அடையலாம் என, உத்திரமேரூர் வட்டாட்சியர் சாவித்திரி தெரிவித்து உள்ளார்.

No comments