Disqus Shortname

பட்டபகலில் இளம் பெண்ணை தாக்கி 10 சவரன் நகை 10 ஆயிரம் ரொக்கம் திருட்டு

உத்தரமேரூர்,நவ 09
உத்தரமேரூர் தாலுக்கா காவாம்பயிர் கிராமத்தில் வசிப்பவர் குமரவேலு (45)
இவருடைய மனைவி நிர்மலா (35) வீட்டில் தனியாக இருந்த போது முகமூடி அணிந்த மர்ம நபர் உள்ளே நுழைந்து நிர்மலாவை தாக்கியுள்ளார். பின்னர் பீரோவில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கபணம் கொள்ளை அடித்து சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நிர்மலா காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும். நல திட்ட உதவி வழங்க அவ்வழியே சென்ற உத்தரமேரூர்  தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.குணசேகரன்சம்பவ இடத்திற்க்கு சென்று பாதிக்கப்பட்ட நிர்மலாவை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். தகவல் அறிந்தது மாகறல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை மேற்க்கொண்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க  போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர் இதனால் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments