களியாம்பூண்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.
உத்தரமேரூர்
தாலுக்கா களியாம்பூண்டி கிராமத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்
பயிற்சி நிறுவனத்தின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், 18.ம் தேதி
முதல் 24..ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் புதன்கிழமையன்று இயற்கை
விவசாயமும், இயற்கை பாதுகாப்பும், பற்றி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயராமன்
தலைமை தாங்கினார். நாட்டு நலபணி திட்ட அலுவலர் கருப்புதுரை முன்னிலை
வகித்தார். எழில்சோலை அறக்கட்டளை நிறுவனர் மாசிலாமணி சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டு இயற்கை விவசாயத்தின் அவசியம் பற்றியும், அதன் முக்கியத்துவம்
பற்றியும் மற்றும் மரம் வளர்ப்பு மண் வளத்தை எவ்வாறு பாதுகாப்பது
பற்றியும், விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தை சுற்றிலும்
100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஆசிரியை ஆசிரியர்கள்
மாணவியர்கள் கலந்துகொண்டனர், முடிவில் மாணவி ஜோதி நன்றி கூறினார்.
No comments