Disqus Shortname

உத்தரமேரூர் அருகே லோடு வேன் கவிழ்ந்து குழந்தை பலி

உத்தரமேரூர் நவ,13
உத்தரமேரூர் அருகே சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோதாமல்
இருப்பதற்காக திருப்பிய போது லோடு வேன் கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலியானது மேலும் 7 பேர் காயமுற்றனர். சென்னை கொருக்குப்பேட்டையை  சேர்ந்தவர் முகம்மது அன்வர் (30) இவர் லோடுவேன் உரிமையாளர். இவரது மனைவி ரியாஸ்பானு இவர்களுக்கு அக்பர், தஸ்லிமா (ஒன்றரை வயது) என மகன், மகள் உள்ளனர். அன்வர் தனது சித்தப்பாவின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனைவி குழந்தை மற்றும் உறவினர்களுடன் லோடுவேனில் வந்தவாசிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது  உத்தரமேரூரை அடுத்த கண்டிகை அருகே செல்லும்
போது சாலையில் திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதன் மீது
மோதாமல் இருக்க வேனை அன்வர் திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக  திடீரென நிலை தடுமாறி லோடு வேன் கவிழ்ந்தது இதில் அவரது ஒன்றை வயது குழந்தை தஸ்லிமா சம்பவ இடத்திலேயே நசுங்கி பரிதாபமாக இறந்தது.மேலும் முகம்மது அன்வர் இம்தியாஸ் ரியாஸ் பானு சம்சாத்பேகம், தில்ஷத்பானு அக்பர் சாந்தினி உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர் தகவல் அறிந்ததும் பெருநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டுசிகிசைக்காகவும், குழந்தை சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும் வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments