Disqus Shortname

சாலவாக்கம் - உத்திரமேரூர் பேருந்து வசதி கோரிக்கை

உத்திரமேரூர் நவம்பர் 06: 
சாலவாக்கத்தில் இருந்து குண்ணவாக்கம் மற்றும் வாடாதவூர் வழியாக, உத்திரமேரூர் வரை, அரசு பேருந்து இயக்க வேண்டும் என, கிராம மககள் கோரியுள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்ணவாக்கம், வாடாதவூர், சித்தமல்லி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், உத்திரமேரூர் செல்ல, பேருந்து வசதி இல்லை.
இப்பகுதியில், உத்திரமேரூரில் இருந்து திருப்புலிவனம், வாடாதவூர், குண்ணவாக்கம், சாலவாக்கம் வழியாக செங்கல்பட்டு வரை, தனியார் பேருந்து இயங்கி வருகிறது. இப்பேருந்தினை தவறவிட்டால், உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அவசர நேரங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சென்றுவர முடியவில்லை. இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது: பேருந்து வசதியற்ற நிலையில், நடந்து மற்றும் மிதிவண்டிகளில், திருப்புலிவனம் மற்றும் உத்திரமேரூர் பள்ளிக்கு சென்று வருகிறோம். குண்டும், குழியுமான இப்பகுதி சாலையை சீரமைத்து, உத்திரமேரூரில் இருந்து, திருப்புலிவனம் வாடாதவூர் வழியாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments