உலக கழிவறை தினம் விழிப்புணர்வு கூட்டம்
உத்தரமேரூர் நவ-29
உத்தரமேரூர் தாலுக்கா சாத்தனஞ்சேரி ஊராட்சியில் வெள்ளிக்கிழமையன்று பாரத சுகாதார இயக்க திட்டத்தின் கீழ்விழிப்புணர்வு பேரணி நடந்தது. பாரத சுகாதார இயக்கத்திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உஷாராணி, மணிமாறன் தலைமை தாங்கினார்கள். ஊராட்சி மன்றத்தலைவர் இல.வேணு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் திறந்தவெளியில் மலம்கழிப்பதை தவிர்த்து கழிவறையை மட்டுமே பயன்படுத்தவேண்டும். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவேண்டும் என எடுத்துக்கூறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் உமாபதி
செய்திருந்தார். மகளிர்குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவ மாணவியர்
பங்கேற்றனர்.
உத்தரமேரூர் தாலுக்கா சாத்தனஞ்சேரி ஊராட்சியில் வெள்ளிக்கிழமையன்று பாரத சுகாதார இயக்க திட்டத்தின் கீழ்விழிப்புணர்வு பேரணி நடந்தது. பாரத சுகாதார இயக்கத்திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உஷாராணி, மணிமாறன் தலைமை தாங்கினார்கள். ஊராட்சி மன்றத்தலைவர் இல.வேணு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் திறந்தவெளியில் மலம்கழிப்பதை தவிர்த்து கழிவறையை மட்டுமே பயன்படுத்தவேண்டும். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவேண்டும் என எடுத்துக்கூறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் உமாபதி
செய்திருந்தார். மகளிர்குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவ மாணவியர்
பங்கேற்றனர்.
No comments