விரைவு பட்டா மாறுதல் முகாம்
உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையன்று விரைவு பட்டா மாறுதல் முகாம் நடந்தது. உத்தரமேரூர் வட்டாட்சியர் எஸ்.சாவித்திரி
வரவேற்றார். வருவாய் கோட்ட அலுவலர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார் தலைமைதாங்கி 101 பட்டா மாறுதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கினார். உத்தரமேரூர் தாலுக்கா
களியாம்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 21 மனுக்கள்
பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது என்று வட்டாட்சியர் எஸ்.சாவித்திரி
தெரிவித்தார்.
No comments