Disqus Shortname

1265 பயனாளிகளுக்கு இலவச பொருள்கள் வழங்கும் விழா

உத்திரமேரூர், நவ. 17–:
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியத்தில், நெய்யாடுப்பாக்கம், மலையாங்குளம், அண்ணாத்தூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை 1265 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா நடந்தது.
நெய்யாடுப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், உத்தரமேரூர் வட்டாட்சியர் சி.சரஸ்வதி வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் நெ.சீ.தமிழ்மொழி தலைமை தாங்கினார்.
ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், 348 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறிகள், மிக்ஸி, கிரைண்டர்களை வழங்கினார்.
அ.தி.மு.க. ஒன்றியச் செயலர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன், தொகுதிச் செயலர் கே.ஆர்.தருமன், காவாம்பயிர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 மலையாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் ஜீ.ஜீவிதா ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
ஊராட்சி செயலர் பி.செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய மாணவர் அணி பொறுப்பாளர் டி.வெங்கடேசன் வரவேற்றார்.
எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், 580 பயனாளிகளுக்கும், அண்ணாத்தூர் ஊராட்சியில் 337 பயனாளிகளுக்கும் மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர்களை வழங்கினார்.
அண்ணாத்தூர் ஊராட்சி கழக செயலர் வி.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உத்தரமேரூர் மண்டல துணை வட்டாட்சியர் லட்சுமி நன்றி கூறினார்.

No comments