Disqus Shortname

உத்தரமேரூர் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் திறப்பு

உத்தரமேரூர் நவ,23
உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையன்று இந்திய புள்ளியியல் வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், உஷாராணி  மற்றும், இடையம்புதுார் ஊராட்சி மன்ற தலைவர் வெடிஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் டி.எம்.சடையாண்டி, தண்டரைதணிகைவேல், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், காஞ்சி மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநர் மா.இராதாலட்சுமி, கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் ஏ.தாங்கராஜ், ச.புனிதவதி. தட்சணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments