Disqus Shortname

உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி

உத்தரமேரூர் நவ,19
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட
அமராவதிபட்டினம் கிராமத்தில் உலக கழிவறை தினம் விழிப்புணர்வு பேரணி
நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும்
மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் இந்த விழிப்புணர்வு பேரணியில் திறந்த
வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிவறையை பயன்படுத்த வேண்டும், மலம், கழித்த பின் சோப்பினால் கை கழுவ வேண்டும், குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் அனைத்து இல்லங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகள் ஏந்தி கிராம முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இந்த விழிப்புணர்வு பேரணியின் காட்டாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாசிட்டிபாபு வரவேற்றார். கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி தலைமை தாங்கினார், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன் பேரணியை துவக்கிவைத்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் சுகாதாரம் குறித்தும், கழிவறை அமைப்பது அதன் அவசியம் குறித்து விளக்கி பேசி நன்றி கூறினார்.

No comments