Disqus Shortname

உத்தரமேரூரில் கண்தானம், இரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

உத்தரமேரூர் டிச.30,
உத்தரமேரூரில் பன்னாட்டு அரிமாசங்கம் உத்தரமேரூர் சோழா அரிமா சங்கத்தினர் நடத்திய கண்தானம் மற்றும் இரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக் கிழமை  நடந்தது. இப்போட்டியில் சோழா அரிமா சங்கத்தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் நீலகண்டன் வரவேற்றார். நிதிக்குழு பொருளாளர் பி.செயின்ராஜ்ஜெயின், டாக்டர்கள் பி.ஆனந்த், கே.பரமசிவம் முன்னிலை வகித்தனர். டி.கே.கோபாலகிருஷ்ணன் தொகுப்புரையாற்றினார், மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட முன்னாள் ஆளுநர் வி.எஸ்.தளபதி துவக்கிவைத்தார்.  சிறுவர்கள் மாணவர்கள், இளைஞர்கள் மொத்தம் 654 பேர் கலந்துகொண்டு 16 கி.மி தூரம் மாரத்தான் ஓட்டத்தில் ஓடினர். இதில் முதலிடம் பெற்றவர் உத்தரமேரூர் அருகில் உள்ள நெல்வாய் கூட்ரோடில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஏ.ராமமூர்த்திக்கு ரூபாய் 10 ஆயிரம், கேடயம், சான்றிதழும், 2-மிடம் பெற்ற ஜி.துக்கன் ரூபாய் 5 ஆயிரம், 3-மிடம் பெற்ற இளையராஜா 3 ஆயிரம், மற்றும் 10 நபர்களுக்கு ஒரு ஆயிரம், 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசு தலா ரூ.5 நூறு-ஐயும் அரிமா மாவட்ட ஆளுநர் டி.அரவிந்தகுமார் வழங்கி பாராட்டி பேசினார். இவ்விழாவில் எஸ்.கமல்கிஷோர், ரமேஷ்சௌத்ரி, யூ.அமர்த்லால், டாக்டர். கே.பரமசிவம் பி.ஆனந்த், உட்பட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் ஆர்.ஆறுமுகம் நன்றி கூறினார்.

No comments