Disqus Shortname

சமூக சமத்துவப்படை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் டிச, 16
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நேற்று சமூக சமத்துவப்படை கட்சியின் சார்பில் அரசு அலுவலகர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர்கள் ஜெயக்குமார், பூங்காமனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமிழ்அமுதன், ஒன்றிய தலைவர் முருகன், முன்னிலை வகித்தனர். சிவக்குமார், அனைவரையும் வரவேற்றனர். ஆர்ப்பாட்டத்தில்  உத்திரமேரூர்
அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் அரசுக்கு செந்தமான மேய்க்கால்
புறம்போக்கு நிலங்களை  ரியல்எஸ்டேட்டாக மாற்றிவரும்  ஊராட்சி
நிர்வாகத்தினர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து கேஷங்கள் எழுப்பட்டது. மேலும் பட்டா இல்லாத ஏழை எளிய மக்களுக்கு பட்ட வழங்க வேண்டும் நிலமற்ற ஏழை எளிய விவசாயிகளுக்கு நிலங்களை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆற்பாட்டத்தில்  100 பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட சமூக சமத்துவப்படை கட்சியினர்
கலந்துக்கொண்டனர்.

No comments