பால், மின்கட்டணம் உயர்வை கண்டித்து தே.மு.தி.க கண்டன ஆர்ப்பாட்டம்
உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில்
திங்கட்கிழமையன்று காஞ்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க சார்பில் பால் மற்றும் மின்கட்டணம்
உயர்வை கண்டித்தும் அ.தி.மு.க அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.இரமேஷ்பிரபாகர் தலைமை தாங்கினார்.
தே.மு.தி.க மின் தொழிற்சங்கம் மாநில துணை தலைவர் எ,சர்தார் கண்டன உரையாற்றினார். மாவட்ட
துணைச் செயலாளர் வி.பி.ஜான் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன்
அனைவரையும் வரவேற்றார். மாநில மீனவரணி துணை செயலாளர் கஜேந்திரன் எஸ்.குமார் உட்பட பலர்
பங்கேற்றனர். தமிழக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 200க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரூர் செயலாளர் நல்லூர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
No comments