Disqus Shortname

உத்திரமேரூரில் மக்கள் நீதிமன்றம்

 உத்திரமேரூர் டிச,06
உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள்
நீதிமன்ற நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர்
உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் தலைமை
தாங்கினார். இதில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் தீர்வு
காணப்பட்டது. 51 உரிமையியல் வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு ரூபாய்
10,48,500 வசூல் செய்யப்பட்டது. 510 குற்றவியல் வழக்குகள் தீர்வு
காணப்பட்டு ரூபாய் 3,84,000 வசூல் செய்யப்பட்டது. மேலும்  இந்தியன்
ஓவர்சிஸ் மற்றும் ஐ.ஒ.பி வங்கிகள் சார்ந்த வழக்குகளில் 34 வழக்குகளுக்கு
தீர்வு காணப்பட்டு ரூபாய் 42,30,000 வசூல் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு மூத்த நிர்வாகி ராமலிங்கம்
செய்திருந்தார். இதன் மூலம் ஏராளமான பொது மக்கள் பயன்பெற்றனர்.

No comments