Disqus Shortname

உத்திரமேரூரில் அனுமன் ஜெயந்தி

உத்திரமேரூர் டிச 22
ஸ்ரீ.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு உத்திரமேரூர் அடுத்த மருதம்
கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுயம்பு ஸ்ரீ
வீரஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது. சுவாமிக்கு வடமாலை அணிவித்து திருமஞ்சனம் நடைப்பெற்றது. மேலும் வெற்றிலை மாலை, துளசி மாலை, வாழைப்பழ மாலை போன்ற பல்வேறு மாலைகள் அணிவித்து பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
இதே போல் உத்திரமேரூர் ஸ்ரீ.சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் உள்ள
ஸ்ரீ,வீரஆஞ்சநேயர்க்கு திருமஞ்சனம், வெண்ணை காப்பு அலங்காரம்
செய்யப்பட்டது. வடமாலை சாற்றப்பட்ட சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர்.

No comments